மணிமங்கலத்தில் மர்ம காய்ச்சல்: மாணவன் பலி

மணிமங்கலத்தில் மர்ம காய்ச்சல்: மாணவன் பலி
Updated on
1 min read

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பெரிய காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன். டேங்கர் லாரி ஓட்டு நர். இவரது மனைவி நளினி. இவர்களது மகன் சாருப்ரியன்(9) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 9-ம் தேதி காய்ச்சல் காரணமாக சென்னை எழும்பூர் அரசினர் குழந்தைகள் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க் கப்பட்ட சாருப்ரியன், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தான்.

மணிமங்கலத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற ஐஸ்வர்யா(18) கடந்த மாதம் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், தற்போது அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் இறந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் சுகாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நோய் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in