

சென்னை: சென்னைப் பெருநகருக்கான புதிய போக்குவரத்துத் திட்டத்தை தயாரிக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதை விரிவாக்கம் செய்து 5904 சதுர கிலோ மீட்டராக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சென்னைப் பெருநகர் போக்குவரத்து திட்டம் (COMPREHENSIVE MOBILITY PLAN ) கடந்த 2019-ம் ஆண்டு இறுதி செய்யப்பட்டது.
தற்போது பெருநகர் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், இதைப் புதுப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 5904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு புதிய போக்குவரத்துத் திட்டம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறையின் தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் அடிப்படையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடும் வகையில் இந்தப் போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படவுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:
இவ்வாறு இந்த 6 பிரிவுகளை உள்ளடக்கிய போக்குவரத்துத் திட்டமாக புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டத்தை தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.