Published : 07 Nov 2016 09:19 AM
Last Updated : 07 Nov 2016 09:19 AM
பழநியில் கந்தசஷ்டி திருவிழா நிறைவாக மலைக்கோயிலில் சண்முகர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மணக்கோலத்தில் அருள் பாலித்த சண்முகர், வள்ளி, தெய்வானையை வழிபட்டனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநியில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 31-ம் தேதி சுவாமிக்கு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்களும் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ் வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
சூரன்களை வதம் செய்து வெற்றி பெற்ற சண்முகருக்கு வள்ளி, தெய்வானையை மணம் முடித்து வைக்கும் வைபவம் நேற்று காலை மலைக்கோயிலில் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் மணக் கோலத்தில் காட்சியளித்த சுவாமியை தரிசித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT