

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
திருவள்ளூர் மாவட்டம் மடிமை கிராமத்தைச் சேர்ந்தவர் சி.வினோத் (24). டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சங்கீதா (23). எட்டு மாத கர்ப்பிணி. கடந்த 11-ம் தேதி வினோத் பைக்கில் கும்மிடிப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக், இவரது பைக் மீது மோதியது. தலையில் பலத்த காயமடைந்த வினோத், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். அதன்பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணி அளவில் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வினோத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக அவரது உறவி னர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்து உறுப்பு களை எடுத்தனர். கல்லீரல், 2 சிறுநீரகங்களை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 3 நோயாளி களுக்கு டாக்டர்கள் பொருத்தி னர். சென்னை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு இதயம் பொருத்தப்பட்டது. கண்கள் எழும்பூர் அரசு கண் மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டது. அரசு ஸ்டான்லி மருத்துவமனை தோல் வங்கிக்கு அவரது தோல் கொடுக் கப்பட்டது. இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.