Published : 19 Sep 2022 06:47 AM
Last Updated : 19 Sep 2022 06:47 AM

சென்னை | நாளை இபிஎஃப்ஓ குறைதீர் கூட்டம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில், ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம்நாளை (20-ம் தேதி) இணைய வழியில் நடைபெறுகிறது.

எனவே, சென்னை வடக்கு,தெற்கு மண்டல ஓய்வூதியதாரர்கள் தங்களது பெயர், பிஎஃப் கணக்கு, யுஏ எண், பிபிஓ எண்களுடன் குறைகளை pension.rochn1@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அவர்களின் இ-மெயில், மொபைல் எண்ணுக்கு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணைய லிங்க் அனுப்பப்படும்.

இத்தகவலை சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1, சி.அமுதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x