Published : 18 Sep 2022 04:14 AM
Last Updated : 18 Sep 2022 04:14 AM

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று தடுப்பூசி முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் 37-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று நடக்கிறது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 நாட்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு இந்தியா முழுவதும் அரசு மையங்களில் இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த ஜூலை 15-ம் தேதிதொடங்கப்பட்ட இலவச பூஸ்டர் தவணை தடுப்பூசி திட்டம், வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. செப். 30-க்கு பிறகு 18 முதல் 59 வயதுள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை தனியாரில் ரூ.386 செலுத்திதான் போட்டுக் கொள்ள வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x