Published : 16 Sep 2022 10:04 AM
Last Updated : 16 Sep 2022 10:04 AM

ஆ.ராசா பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும்: ஹெச்.ராஜா வலியுறுத்தல்

ஹெச்.ராஜா | கோப்புப் படம்

ஆ.ராசா பேச்சு குறித்து முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்து மதத்தினர் குறித்து ஆ.ராசா எம்.பி. அவதூறாகப் பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் பேசியது ஆதாரமில்லாதது. இந்து சமயத்தில் எந்த இடத்தில் அவர் பேசியதுபோல் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தேசத்தை எதிர்ப்பேன், இந்து மதத்தை எதிர்ப்பேன் என்பது தேவையில்லாதது. ஆ.ராசா தனது சான்றிதழில் இந்து என்று தானே குறிப்பிட்டுள்ளார். இல்லை என்றால் தனித் தொகுதியில் நிற்க முடியாது அல்லவா?.

ஆ.ராசா பேச்சு குறித்து முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் அல்லது அவர் பேச்சை ஏற்கிறாரா?. ஆ.ராசாவை கட்சியில் இருந்து நீக்கி கைது செய்ய வேண்டும்.

ஆ ராசா மீது ஒவ்வொரு இந்துவும் தாமாக முன்வந்து புகார் தர வேண்டும். தமிழகத்தில் குறைந்தது ஐந்தாயிரம் புகாராவது பதியப்பட வேண்டும்.

திருச்செந்துறை மொத்த கிராமத்தையும் வக்பு வாரியத்தின் சொத்து என்று வக்பு வாரியத் தலைவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் செயல்படுகிறார். வக்பு வாரியத்துக்கு எதிராக அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும்.

ஆ.ராசா பேசியது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு கேட்கவில்லை என்பதைப்போல் செய்கை காட்டியுள்ளார். இதனால் அவருக்கு காது கேட்கும் கருவி அனுப்பி வைக்கப்படும்.

ஆ ராசா மீது 15 நாட்களில் போலீஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x