Published : 11 Nov 2016 09:15 AM
Last Updated : 11 Nov 2016 09:15 AM

காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் போராட்டம்

தாரா என்ற திருநங்கை தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்த போலீஸார் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திரு நங்கைகள் போராட்டம் நடத்தினர்.

சென்னை பாண்டிபஜார் காவல் நிலையம் முன்பு நேற்று முன்தினம் தாரா(40) என்ற திருநங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் தரக்குறை வாக திட்டியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக திருநங்கைகள் குற்றம் சாட்டியுள் ளனர்.

எனவே தாரா தற் கொலைக்கு காரணமான பாண்டி பஜார் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 30-க்கும் மேற் பட்ட திருநங்கைகள் நேற்று காலை யில் சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். அத்துடன் அவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமர்ந்து போராட்டம் நடத்த முயன்றபோது லேசான தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர்.

மேலும், வேப்பேரி போலீஸார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x