Published : 05 Nov 2016 08:57 AM
Last Updated : 05 Nov 2016 08:57 AM

அண்ணா நூற்றாண்டு நூலக குறைபாடுகளை நவம்பருக்குள் சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அண்ணா நூற்றாண்டு நூலக குறைபாடுகளை நவம்பர் இறு திக்குள் சீரமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற பேராசிரியர் மனோன்மணியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு வில், ‘‘சென்னை கோட்டூர்புரத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த நூலகம் முறையாக பராமரிக்கப்படவில்லை’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அண்ணா நூலகத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் ஆகியோரை சட்ட ஆணையர்களாக நியமித் திருந்தது. இவர்கள் சுட்டிக்காட்டிய குறைகளை கடந்த ஜூன் 31-ம் தேதிக்குள் சரி செய்ய தமிழக அரசுக்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதன்படி குறைகள் முழுவதுமாக நிவர்த்தி செய்யப் படவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நேற்று நடந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், “ஏற்கெனவே உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை அரசு நிவர்த்தி செய்து வருகிறது. எஞ்சிய குறைபாடுகள் வரும் நவம்பர் இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும்’’ என்றார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் நவம்பர் இறுதிக்குள் அண்ணா நூலக குறைபாடுகளை சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஏற்கெனவே உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை அரசு நிவர்த்தி செய்து வருகிறது. எஞ்சிய குறைபாடுகள் வரும் நவம்பர் இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x