

சென்னை: முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டத்தில் எவ்வித தவறும் நடைபெறாத வகையில் பல்வேறு கண்காணிப்பு வழிமுறைகளை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நாளை (செப்.16) தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களுக்கு சத்தான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தில் எந்த தவறும் நடைபெறாத வகையில் பல்வேறு கண்காணிப்பு முறைகளை தமிழக அரசு நடைமுறைபடுத்தியுள்ளது. இதன் முழு விவரம்: