Published : 15 Sep 2022 09:21 AM
Last Updated : 15 Sep 2022 09:21 AM

அண்ணா பிறந்தநாள் | மதுரையில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

அண்ணாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்

மதுரை: முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி, மதுரை நெல்பேட்டை சந்திப்பில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்ததினத்தையொட்டி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.

முன்னதாக மதுரை நெல்பேட்டை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், தமிழக அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசுத் துறை செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x