Published : 11 Sep 2022 04:25 AM
Last Updated : 11 Sep 2022 04:25 AM

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

திமுக முதன்மை செயலாளரான கே.என்.நேரு, கடந்த 2020-ம் ஆண்டு கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, அதிமுக அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி இன்னும் 11 மாதங்களில் கோவை சிறையில் அடைக்கப்படுவார் என்று நேரு பேசினார்.

இதையடுத்து, அமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரு மனு தாக்கல் செய்தார்.

புகழுக்கு களங்கம் இல்லை..

நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “மனுதாரர் கே.என்.நேருவின் பேச்சு, அப்போது அமைச்சராக இருந்த வேலுமணியின் புகழுக்கு எவ்விதத்திலும் களங்கம் ஏற்படுத்தவில்லை.

அமைச்சரின் பணி குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் இல்லை’’ என்று கூறி, அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x