Published : 12 Oct 2016 09:38 AM
Last Updated : 12 Oct 2016 09:38 AM
தமிழக காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணிக்கு புதிய நிர்வாகிகளை அந்த அணியின் தலைவர் எஸ்.டி.சபீன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக காங்கிரஸின் மீனவர் அணிக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் உள்ள சில பொறுப்புகளுக்கு புதிய நிர் வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள னர். அதன்படி, தமிழக காங் கிரஸ் மீனவர் அணியின் துணைத் தலைவர்களாக ஆர்.பார்த்திபன், ஆர்.சத்தியா, மாநில பொதுச் செயலாளர்களாக டி.பிரேம் சஞ்சீவி, தெய்வநாயகி, கே.ரவி, மாநில செயலாளராக எஸ். பிரேம்குமார் ஆகியோர் நிய மிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை வடக்கு மாவட்டத்துக்கு ஜெ.ஜெயந்தன், திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆர்.அந்தோணி, திருச்சி வடக்கு மாவட்டத்துக்கு எஸ்.பி.மணியன், திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு குணசேகரன், ராமநாதபுரத்துக்கு முத்துராஜ் ஆகியோர் மீனவர் அணி மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட நியமனங்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரின் ஒப்புதலோடு நடந்துள்ளன. இவ்வாறு எஸ்.டி.சபீன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT