Published : 08 Sep 2022 04:00 PM
Last Updated : 08 Sep 2022 04:00 PM

கோவில்பட்டியில் தீப்பெட்டித் தொழிற்சாலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். தீப்பெட்டித் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

திருநெல்வேலியில் இன்று காலை தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கலந்துகொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். பின்னர், தீப்பெட்டித் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பின்னர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x