பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தங்க ரதம் இழுத்து வழிபட்ட ஓ.பன்னீர்செல்வம்.
தமிழகம்
பழநி மலைக்கோயிலில் தங்க ரதம் இழுத்த ஓபிஎஸ்
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று மாலை வந்தார்.
சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு ராஜ அலங்காரத்தில் காட்சி தந்த முருகனை தரிசித்தார். பின்னர் தங்கரதம் இழுத்து வழிபட்டார். முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் உட்பட அவரது ஆதரவாளர்கள் உடன் வந்தனர்.
