வேந்தர் மூவீஸ் மதனை கண்டுபிடிக்க போலீஸுக்கு மேலும் 4 வாரம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

வேந்தர் மூவீஸ் மதனை கண்டுபிடிக்க போலீஸுக்கு மேலும் 4 வாரம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மாயமான வேந்தர் மூவீஸ் மதனை கண்டுபிடிக்க இன்னும் 4 வாரம் அவகாசம் தேவை என போலீஸார் விடுத்த வேண்டுகோளை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 29-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

வேந்தர் மூவீஸ் மதன் கடந்த மே மாதம் தலைமறைவானார். அவரது தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், மதனை கண்டுபிடிப்பதற்கும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி நடந்த பணமோசடி குறித்தும் விசாரிப் பதற்காக போலீஸ் கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணனை நியமித்தனர்.

அதன்பிறகு இந்த வழக்கை விசாரித்த வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அக்டோபர் 6-க்குள் மதனைக் கண்டுபிடிக்கா விட்டால் போலீஸ் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மதனைக் கண்டுபிடிக்க போலீஸார் ஒன்றும் மாயா ஜால வித்தைக்காரர்கள் இல்லை எனக்கூறி அக்டோபர் 24-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாரிவேந்தர் சார்பில் ஆஜரான மூத்த வழக்க றிஞர், ‘‘ மதன் வாரணாசியில் மாய மாகியுள்ளார். எனவே இந்த வழக்கை சென்னையில் விசாரிக்க இந்த உயர் நீதிமன்றத்திற்கு அதிகார மில்லை. இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே இதை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.

அப்போது போலீஸார் தங்க ளின் 7-வது புலன் விசாரணை அறிக்கையை நீதிபதிகளிடம் தாக்கல் செய்து, ‘‘4 வாரங்களுக் குள் மதனைக் கண்டிப்பாக கண்டு பிடித்து நேரில் ஆஜர்படுத்து வோம்’’ என்றனர். அதையேற்ற நீதிபதிகள், மதனைக் கண்டு பிடித்து ஆஜர்படுத்த 4 வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in