வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து 

வஉசி படத்திற்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்
வஉசி படத்திற்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: "தற்சார்பு - தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரானாரின் வழிநடப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சுதேசி இயக்கத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து, தியாகத்தின் முழு உருவான 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம்.

தற்சார்பு - தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்திச் செயல்பட்ட அவரது வழிநடப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை துறைமுக வளாகத்தில் வ.உ.சியின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின்போது, தமிழக அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in