Published : 04 Sep 2022 01:47 PM
Last Updated : 04 Sep 2022 01:47 PM

வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக பகுதிகளில் மேல் நிலவும்‌ வளிமண்டல கீழக்கு சுழற்சி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக் கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, மதுரை, கரூர்‌, திருச்சி, நாமக்கல்‌, சேலம்‌, தருமபுரி,கிருஷ்ணகிரி மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (திங்கட்கிழமை) தமிழகம், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, தென்காசி, மதுரை, கரூர்‌, திருச்சி, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கரூர்‌, திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, நாமக்கல்‌, சேலம்‌, தருமபுரி, கிருஷ்ணகிரி , வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளுர்‌, காஞ்சிபுரம்‌, திருவண்ணாமலை மற்றும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x