Published : 27 Oct 2016 08:39 AM
Last Updated : 27 Oct 2016 08:39 AM
முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் நேற்று பதிவு செய்த கருத்து பின்வருமாறு:
முதல்வர் ஜெயலலிதா நினைவு திரும்பியுள்ளார். மருத்துவ மனையில் இருந்து விரைவில் அவர் வீட்டுக்கு செல்வார் என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே, ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் இருங்கள். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT