Published : 25 Jun 2014 09:43 AM
Last Updated : 25 Jun 2014 09:43 AM

சென்னை வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று 61 சவரன், ரூ.3 லட்சம் கொள்ளை: கேமராவில் பதிவான கொள்ளையர்கள் உருவம்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து, ரூ.3 லட்சம், 61 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணி ஜான்கான் சாலை தேவராஜ் தெரு வில் வசிப்பவர் அலி முகமது உசேன்(60). ஜாம்பஜாரில் பிரிண் டிங் பிரஸ் வைத்துள்ளார். இவரது மனைவி மெஹருன்னிசா (57). இவர் ரிசர்வ் வங்கியில் அதிகாரி யாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வர். இவர்களின் மகன் சுனித் அலி(30). இவருக்கு திருமணமாகி மனைவியுடன் துபாயில் வசிக்கி றார்.

பிரிண்டிங் பிரஸ் பணிகளை கவனிப்பதற்காக தினமும் காலையில் அலி முகமது உசேன் அங்கு சென்று விடுவார். மதியம் வீட்டில் வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் பிரஸ்க்கு சென்று விடுவார். கணவர் திரும்பி வரும் வரை மெஹருன்னிசா மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். வழக்கம்போல செவ்வாய் கிழமை காலையில் பிரஸ்க்கு சென்று விட்டு, மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார் அலி முகமது. அப்போது சேரில் உட்கார்ந்த நிலை யில் , கை-கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணியை அமுக்கி வைத்தி ருந்த நிலையில் மெஹருன்னிசா இருந்தார்.

வாயில் இருந்த துணியை எடுத்து, கட்டுகளை பிரித்து, தண்ணீர் தெளித்து மனைவியை எழுப்ப முயன்றார் அலி முகமது. ஆனால் மெஹருன்னிசா இறந்திருப்பதை அறிந்து கொண்டார். உடனே 100-க்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்க, ஜாம்பஜார் காவல் துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மெஹருன்னிசா உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பீரோவில் இருந்த 61 சவரன் நகை கள், ரூ.3 லட்சம் பணம் கொள்ளை யடிக்கப் பட்டிருப்பதும் தெரிந்தது.

மெஹருன்னிசாவின் வீடு மூன்று மாடிகளை கொண்டது. இதில் தரை மற்றும் முதல் மாடியை வாடகைக்கு விட்டுள்ளார். இரண்டாவது மாடியில் மெஹருன்னிசா வசிக்கி றார். வீட்டிற்கு வெளியே ஒரு கண்காணிப்பு கேமரா வைக்கப் பட்டுள்ளது. அதில் பர்தா அணிந்து ஒரு பெண்ணும், அவருடன் மற்றொரு நபரும் வீட்டுக்குள் நுழை யும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது. அந்த இருவரும் சேர்ந்து மெஹருன்னிசாவை கொலை செய்து கொள்ளையடித்திருக் கலாம். மெஹருன்னிசா தனியாக இருக்கும் நேரம் அவர்களுக்கு நன்றாக தெரிந்துள்ளது. எனவே அலி முகமது- மெஹருன்னிசா தம்பதிக்கு அறிமுகமான நபர்கள் தான் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கின்றனர் என தெரி கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x