வேடசந்தூர் | காருடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேர் மீட்பு

வேடசந்தூர் அருகே  காட்டாற்று வெள்ளத்தில் 6 பேருடன் அடித்துச் செல்லப்பட்ட கார்.
வேடசந்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் 6 பேருடன் அடித்துச் செல்லப்பட்ட கார்.
Updated on
1 min read

வேடசந்தூர்: வேடசந்தூர் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்(53), தனது காரில் நண்பர்கள் பாலசுப்பிரமணி(56), பாலகிருஷ்ணன் (34), பாண்டியன்(42), செல்வராஜ் (50), மணிக்குமார்(35) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை வேடசந்தூர் அருகே கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

வள்ளிப்பட்டியை அடுத்துள்ள சாலையின் குறுக்கே சென்ற சிற்றோடை தரைப்பாலத்தை மூழ்கியபடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

போலீஸ், எச்சரிக்கையை மீறி ஓடையை காரில் மெதுவாக கடக்க முயன்றபோது திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் கார் சிக்கியது. இதில் 6 பேருடன் கார் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள், போலீஸார் உதவியுடன் காரில் இருந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in