மவுலானா ஆசாத் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மவுலானா ஆசாத் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் வசிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவிகளுக்கு, மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

இது 2 தவணைகளில் பிளஸ் 1-ல் ரூ.6 ஆயிரம், பிளஸ் 2-ல் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற, 2016-17-ம் கல்வியாண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயில்பவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாகவும் இருத்தல் வேண்டும்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சிறு பான்மை மாணவியர் இக்கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தை www.maef.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in