மறைந்த எழுத்தாளரின் உடல், கண்கள் தானம்

சுந்தர மகாலிங்கம்
சுந்தர மகாலிங்கம்
Updated on
1 min read

ஸ்ரீ வில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம்(82). இவரது மனைவி அமர்ஜோதி கடந்த ஆண்டு மறைந்தார். இவர்களுக்கு திலீபன்(53), கோபிநாத்(52, கவுதமன்(47) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியரான சுந்தர மகாலிங்கம் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் தொடர்கள் மற்றும் புத்தகங்களை எழுதி உள்ளார்.

தான் இறந்தபிறகு தனது கண்கள் மற்றும் உடலை தானம் செய்ய வேண்டும் என உயில் எழுதியிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. அவரது உடல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மெய்யியல் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in