Published : 18 Oct 2016 08:47 AM
Last Updated : 18 Oct 2016 08:47 AM

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் 2017 ஜனவரியில் நடத்தப்பட உள்ள அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Computer on Office Automation) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, இந்த சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண் ணப்பிக்கலாம்.

ஒருவேளை, பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டால் தகுதி காண் பருவத்துக்குள் கண் டிப்பாக தேர்ச்சி பெற்றாக வேண்டும்.

அரசு கணினி சான்றிதழ் தேர்வை தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு 2 முறை நடத்து கிறது. 2016 டிசம்பரில் நடத்தப் பட வேண்டிய சான்றிதழ் தேர்வு 2017 ஜனவரி 7, 8 தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் (www.tndote. org) நவம்பர் 11-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ள லாம். பூர்த்தி செய்த விண்ணப் பங்களை, உரிய சான்றிதழ் களுடன் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு நவம்பர் 18-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x