Published : 28 Oct 2016 07:55 AM
Last Updated : 28 Oct 2016 07:55 AM
பழங்கால சிலைகளை வெளி நாடுகளுக்கு கடத்திவந்த தீனதயாளின் 3 கூட்டாளிகளை வருவாய் புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராள மான சிலைகள் பறிமுதல் செய் யப்பட்டன.
சிலை கடத்தல் தொடர்பாக சென்னை வருவாய் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு சில ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையிலும், தீனத யாள் கொடுத்த தகவலின்படியும் அவரது கூட்டாளிகள் பாலாஜி, உதித் ஜெயின், ஸ்ரீகாந்த் ஓம்காரம் ஆகியோர் சென்னை யில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து புராதன மான மகாவிஷ்ணு, பிரம்மா, நந்தி, விநாயகர் சிலைகள், கல்தூண் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT