Published : 28 Apr 2014 10:36 AM
Last Updated : 28 Apr 2014 10:36 AM

தமிழகம் முழுவதும் கடும் வறட்சி: குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை - அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி வாட்டி வதைக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் கிடைக் காமல் மக்கள் அவதிக்குள்ளா கின்றனர். கால்நடைகளும் தண்ணீர் கிடைக்காமல் சிரமப் படுகின்றன.

மாநிலம் முழுவதும் நீர்நிலைகள் வறண்டும், நிலத்தடி நீர்வளம் குறைந்தும் உள்ளது. கடந்த காலங்களில் நீர்நிலைகள், அணைகள் உரிய முறையில் பராமரிக்கப்படாததும், தூர்வாரப் படாததுமே இத்தகைய மோசமான நிலைக்குக் காரணமாகும்.

எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் அனைத்துப்பகுதி மக்களுக்கும் போதுமான அளவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர் வாரவும், ஏற்கெனவே நிலுவையிலுள்ள குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடித்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறை வேற்றப்பட்டதாக, அக்கட்சி வெளியிட்ட செய்தியில் தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x