Published : 09 Oct 2016 10:17 AM
Last Updated : 09 Oct 2016 10:17 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் போராட்டங்கள் தொடரும்: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து பாமக சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, செய்தித் தொடர்பாளர் கே.பாலு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர் பாக 1924-ல் மைசூர் - சென்னை மாகாணத்துக்கு இடையே ஒப்பந் தம் ஏற்பட்டது. 1974-ல் இந்த ஒப்பந் தத்தைப் புதுப்பிக்க அன்றைய திமுக அரசு தவறிவிட்டது. இதனால் காவிரி பிரச்சினை இன்ற ளவும் தொடர்கிறது. காவிரி பிரச்சி னையில் தமிழகத்துக்கு முதல் துரோகம் செய்தது திமுக.

மத்தியிலும், கர்நாடகாவிலும் மாறி மாறி ஆட்சி செய்யும் காங் கிரஸ், பாஜக அரசுகள் கர்நாடகத் துக்கு ஆதரவாக செயல்பட்டு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன. இதுபற்றி தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கவலைப்படவில்லை. தமிழக நலனில் அக்கறை காட்டாத இந்தக் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு மறுத்துள்ளது. இதன்மூலம் தமிழக மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை பாஜக அரசு செய் துள்ளது. காவிரி போன்ற நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நதிகளை தேசிய மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும். இல்லையெனில் மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட் டங்களை பாமக நடத்தும். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு வரும்போது, அவர் களுக்கு கருப்புக் கொடி காட்டுவோம். தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழகத் துக்கு நியாயம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். புதிய அணைகள் கட்டாமல் கர்நாடகாவை தடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x