Published : 10 Oct 2016 10:04 AM
Last Updated : 10 Oct 2016 10:04 AM

கோயம்பேடு சிறப்பு சந்தையில் ஆயுத பூஜை விற்பனை மந்தம்

முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவு போன்ற காரணங்களால் கோயம்பேடு மார்க்கெட்டில் திறக்கப்பட்டுள்ள ஆயுத பூஜை சிறப்புச் சந்தையில் விற்பனை மந்தமாக இருந்தது.

கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் ஆயுத பூஜை சிறப்புச் சந்தை, கடந்த 6-ம் தேதி தொடங் கியது. சென்னையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் கொண்டுவரப்பட்டு இங்கு விற்கப்படுகின்றன.

சிறப்புச் சந்தையில் சாமந்தி பூ ஒரு முழம் ரூ.20, கதம்பம் ரூ.20, மல்லி ரூ.20, கனகாம்பரம் ரூ.30, பூசணிக்காய் சிறியது ரூ.40, பெரியது ரூ.80, பெரிய தேங்காய் ரூ.40, ஒரு கொத்து மாவிலை ரூ.10, வாழைப்பழம் ஒரு டசன் ரூ.60, ஆப்பிள் கிலோ ரூ.100, சாத்துக்குடி ரூ.100, கொய்யா ரூ.100, ஆரஞ்சு ரூ.50, வாழைக்கன்று ஒரு ஜோடி சிறியது ரூ.50, பெரியது ரூ.100, தென்னை ஓலை தோரணம் (5 எண் ணிக்கை) ரூ.10, ஒரு வாழை இலை ரூ.2, பெரியது ரூ.6 ஒரு படி பொரி ரூ.10, ஒரு படி அவல் ரூ.120, உடைத்த கடலை ஒரு படி ரூ.100, கரும்பு ரூ.40, என விற்பனை செய் யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனை மந்தமாக இருப்ப தாக சிறப்புச் சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தெரி விக்கின்றனர். இது தொடர்பாக பழ வியாபாரி நந்தகோபால் கூறிய தாவது:

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடியும் நேரத்தில் இந்த ஆண்டு ஆயுத பூஜை வரு கிறது. அதனால், உள்ளாட்சி சார்ந்த அமைப்புகள் மற்றும் அதன் அலுவலகங்களில் ஆயுத பூஜை விழா நடைபெற வாய்ப்பில்லை.

வழக்கமாக ஆயுத பூஜையை ஆளும் கட்சியினர் சிறப்பாக கொண்டாடுவர். முதல்வர் ஜெய லலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருப்பதால், ஆளுங் கட்சியினரிடம் கொண்டாட்டம் இல்லை. அரசு அலுவலகங்களி லும் ஆயுதபூஜை கொண்டாடப் படவில்லை. அதனால் இந்த ஆண்டு வியாபாரம் மந்தமாகவே உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், மணலி உட்பட புறநகரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் ஆயுத பூஜைக்கு முன்னதாகவே விழா கொண்டாடுவது வழக்கம். அவர்களால் கடந்த இரு நாட்களாக வியாபாரம் ஓரளவு இருந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x