இடைத்தேர்தல்: அக்.20 வரை விருப்பமனு பெறுகிறது திமுக

இடைத்தேர்தல்: அக்.20 வரை விருப்பமனு பெறுகிறது திமுக
Updated on
1 min read

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 20-ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வரும் நவம்பர் 19- தேதி தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் இங்கு போட்டியிட விரும்புவோர் வரும் 20-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும். விண்ணப்ப படிவங்களை ரூ. 1,000 செலுத்தி தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் ரூ. 25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in