Published : 27 Oct 2016 08:35 AM
Last Updated : 27 Oct 2016 08:35 AM
ஆவடியை அடுத்த அண்ணனூர், அந்தோணி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சுகுமார் (46). அம்பத்தூர், வெங்கடேசுவரா நகர் விரிவு பகுதியில் அச்சகம் நடத்திவந்தார். இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு தினேஷ்குமார் (24), அஸ்வின் (14) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 24-ம் தேதி இரவு வேலை முடிந்து ஊழியர்கள் சென்றதும், சுகுமார் கம்பெனியில் தங்கினார். மறுநாள் காலையில் தலையில் பலத்த காயத்துடன் சுகுமார் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்த, அக்கம்பக்கத்தினர் அம்பத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
முதல்கட்ட விசாரணையில், “அயனம்பாக் கத்தைச் சேர்ந்த ஜோசப்பிடம் சுகுமார் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். கடனுக்கு சுகுமார் வட்டியும் கொடுத்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று கடனை கேட்டு ஜோசப் அச்சகத்துக்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜோசப் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சுகுமாரின் தலையில் பலமாக அடித்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்” என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான ஜோசப்பை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தனது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியில் பதுங்கியிருந்த ஜோசப்பை நேற்று கைது செய்தனர். அவரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT