Published : 29 Oct 2016 10:50 AM
Last Updated : 29 Oct 2016 10:50 AM

பேரவைத் தலைவர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் ஆதரிப்போம்: காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உறுதி

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் மீது திமுக நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தால் காங்கிரஸ் ஆதரிக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

சட்டப்பேரவை விதிகளின்படி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப் பினர்களைக் கொண்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்படுவது வழக் கம். அதன்படி தமிழகத்தில் 12 குழுக் கள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், அதிமுக அரசு பொறுப் பேற்று 5 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் இதுவரை எந்தவொரு குழுவும் அமைக்கப்படவில்லை.

இந்த 12 குழுக்களையும் அமைக் கக்கோரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பேரவைத் தலைவர் அலுவலகத்தில் நேரில் மனு கொடுத் துள்ளார். சட்டப்பேரவை குழுக்கள் அமைக்காவிட்டால் பேரவைத் தலைவர் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என அறிவித் துள்ளார். அதன்படி, நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டுவரப்பட் டால் அதனை காங்கிரஸ் ஆதரிக்கும்.

சென்னையில் உள்ள சிப்பெட் தலைமை அலுவலகத்தை டெல் லிக்கு மாற்றக் கூடாது என காங் கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போராட் டம் நடத்தின. தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக சிப்பெட் தலைமை அலுவலகம் டெல்லிக்கு மாற்றப்படாது என மத்திய அமைச் சர் அறிவித்துள்ளார். வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. இந்தத் திட்டத்தின்கீழ் புதியவர்களுக்கு வேலை வழங்கவும், கூலியை உட னுக்குடன் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி காங்கிரஸ் போராடும்.

வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்களும் பிரச்சாரம் செய்வார்கள்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு மறுத்து வருகிறது. இந்நிலை நீடித் தால் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் மன்னிக்க மாட் டார்கள். இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

விதிகளின்படி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்படுவது வழக்கம். 5 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் இதுவரை எந்தவொரு குழுவும் அமைக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x