Published : 19 Aug 2022 03:56 AM
Last Updated : 19 Aug 2022 03:56 AM

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கனடா பயணம் - காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார்

சென்னை: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் கனடா செல்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆக.22 முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் பிரதிநிதியாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் நடைபெறும் சொசைட்டி ஆஃப் கிளர்க்ஸ் அட் த டேபிள் (எஸ்ஓசிஏடிடி) கூட்டங்களில் பேரவை செயலர் கி.சீனிவாசன் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பேரவைத் தலைவர், செயலர் ஆகியோர் 18-ம் தேதி (நேற்று) இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டு பிறகு, ஹாலிபேக்ஸ் நகர் சென்றடைகின்றனர். செப்டம்பர் 1-ம் தேதி சென்னை திரும்புகின்றனர்.

இந்நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு அறைக்கு சென்றுஅவருக்கு முதல்வர் ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி உடன் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x