Published : 18 Aug 2022 07:49 PM
Last Updated : 18 Aug 2022 07:49 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு... போலீசார் வரம்புகளை மீறி செய்தது என்ன? - ஆணைய அறிக்கையின் அம்சங்கள்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, அந்த ஆலையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை 2018-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி, அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்தது.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை முடிவுற்ற நிலையில், விசாரணை அறிக்கையை கடந்த மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கினார். இந்த அறிக்கையில் உள்ள பரிந்தரைகள் தொடர்பான முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம்:

  • போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டனர்.
  • குண்டு வருவது தெரியாமால் போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்.
  • பூங்காவில் ஒளிந்து கொண்டு சுட்டனர்
  • கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு.
  • தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் இல்லை.
  • போலீசாரின் துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமான செயல்
  • போலீசார் வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்
  • காவல் துறை தலைமையின் அப்பட்டமான தோல்வி
  • போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் மிக அலட்சியமாக அணுகியுள்ளார்
  • பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டு கோவில்பட்டியில் இருந்துள்ளார் ஆட்சியர்.
  • ஆட்சியர் எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்.
  • வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார்.
  • ஒரு போலீஸ்காரர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார்.
  • ஒரே போலீசாரை 4 இடங்களில் சுட வைத்து உள்ளனர்.
  • தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x