

தருமபுரி நீதிமன்றத்தில் நடந்து வரும் காசோலை மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் சேரனின் மகள் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திரைப்பட நடிகர் சேரன் தனது புதிய படம் ஒன்றை ‘சி 2 ஹெச்’ என்ற தொழில்நுட்பம் மூலம் டிவிடி வடிவில் வெளியிட முயற்சி மேற்கொண்டார். இதற்கு மாவட்ட வாரியாக விநியோக உரிமை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட உரிமையை தருமபுரியைச் சேர்ந்த பிரசன்னா என்பவர் பெற்றிருந்தார். அவருக்கு இதன் மூலம் நஷ்டம் ஏற்பட்ட தாகவும், இழப்பீடு வேண்டும் எனவும் வலியுறுத்தி சேரனை அணுகியுள்ளார்.
சேரனின் நிறுவனம் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி பெயரில் தொடங்கி நடத்தப்பட்டது. எனவே அவர் மூலமாக ரூ.4.35 லட்சம் ரூபாய்க்கான காசோலை பிரசன்னாவுக்கு வழங்கப்பட்டுள் ளது. ஆனால், வங்கிக் கணக்கில் பணமின்றி அந்த காசோலை திரும்பி யதால் தருமபுரி விரைவு நீதிமன் றத்தில் பிரசன்னா வழக்கு தொடுத் தார்.
இந்த வழக்கின் முந்தைய வாய்தாவின்போது நிவேதா ஆஜ ராகவில்லை. எனவே நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து, அக்டோபர் 4-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. நேற்றைய விசார ணைக்கு நிவேதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை மீண்டும் வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.