Published : 17 Aug 2022 07:43 AM
Last Updated : 17 Aug 2022 07:43 AM

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு: தமிழக நிதித் துறை விளக்கம்

சென்னை: தலைமைச் செயலர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் தமிழக அரசின் அகவிலைப்படியானது ஜூலை 1-ம்தேதி முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

சுதந்திர தின உரையில், 3 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதிமுதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அதை மத்திய அரசு உயர்த்திய தேதியில் இருந்து வழங்க வேண்டும் என்று பல்வேறு சங்கங்கள்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நிதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் 75-வது சுதந்திரதின உரையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஜூலை1-ம் தேதி முதல் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித் திருந்தார். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x