Published : 15 Aug 2022 03:49 PM
Last Updated : 15 Aug 2022 03:49 PM

சுதந்திர தினம் | தேமுதிக அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிய விஜயகாந்த்

சென்னை:சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், கட்சியின் நிறுவனத்தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள செய்தி: "இந்தியாவின் 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று (15.08.2022) கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.

இந்நிகழ்வில்,கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் , தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலார்கள், மகளிர் அணியினர், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் கலந்துகொண்டர்.

சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x