Published : 13 Aug 2022 05:34 PM
Last Updated : 13 Aug 2022 05:34 PM

கொசஸ்தலை ஆற்றில் இரு அணைகள் கட்டும் திட்டத்தைக் கைவிடுக: ஆந்திர முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொசஸ்தலை ஆற்றில் இரு அணைகள் கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் வழங்கலைப் பாதிக்கும்.

இதைக் கருத்தில் கொண்டு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசினை கலந்தாலோசிக்காமல் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த கூடாது’ என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x