

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப் பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.
தமிழகத்தில் கடந்த மே 16-ம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தது. பணப்பட்டுவாடா புகார்களால் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, அதன் பின்னர் ரத்து செய்யப்பட்டது. மற்ற 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து மே 19-ம் தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், திருப்பரங் குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சீனிவேலு, உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே அரவக் குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (26-ம் தேதி) தொடங்கி நவம்பர் 2-ம் தேதி முடிகிறது. 3-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை வாபஸ்பெற நவம்பர் 5 கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், திருப்பரங் குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சீனிவேலு, உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே அரவக் குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி வாக்குப் பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (26-ம் தேதி) தொடங்கி நவம்பர் 2-ம் தேதி முடிகிறது. 3-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை வாபஸ்பெற நவம்பர் 5 கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.