Published : 11 Aug 2022 01:44 PM
Last Updated : 11 Aug 2022 01:44 PM

'பெரியார் கருப்புச் சட்டை அணிந்து தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்' - ப.சிதம்பரம்

சென்னை: பெரியார் கருப்புச் சட்டை அணிந்தே தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கருப்புச் சட்டை தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதில் அளித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதரம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," கருப்புச் சட்டை அணிந்தவர்கள் ஒருபோதும் மக்களின் நம்பிக்கையைப் பெற மாட்டார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார் தந்தை ஈ வெ ரா பெரியார் தம் வாழ்நாள் முழுதும் கருப்புச் சட்டையை அணிந்தார். அவர் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார் (சனாதனவாதிகளைத் தவிர) என்பதை நாடறியும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x