

மதுராந்தகம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து நேற்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
மதுராந்தகம் அருகே உள்ளது கிணார் மற்றும் கிழவளம் கிராமங் கள். இக்கிராமங்களில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருப் பதால், அவ்வழியாக இயக் கப்பட்ட பேருந்து சேவை நிறுத்தப் பட்டது. இதனால் அரையப்பாக்கம் பகுதிக்கு வந்த கிராம மக்கள், தங்கள் கிராமத்துக்குச் சாலை வசதி செய்து தரக்கோரியும், மீண்டும் பேருந்தை இயக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரு அரசுப் பேருந்துகளைச் சிறைபிடித் தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் அவர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மீண்டும் பேருந்தை இயக்குவதாக வும், சாலை வசதி செய்து தருவதாக வும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட் டனர்.