பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: 22 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பம்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: 22 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் பொறியியல் இளநிலை படிப்புகளில் உள்ள 1.5 லட்சத்துக்கும் மேலான இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது.

மொத்தம் 2.11 லட்சம் மாணவர்கள் பதிவுசெய்த நிலையில், 1.58 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.

இதற்கிடையே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக உயர்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:

நடப்பு கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 11 ஆயிரத்துக்கும் மேலான இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இதில் சேர்க்கை பெற சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும். எனினும், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் பொது கலந்தாய்வில் பங்கேற்று பிடித்தமான கல்லூரிகளில் சேரலாம்.

எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் சேர்க்கை இடங்கள் கிடைக்கும். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர். கடந்தாண்டு 7,876 அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in