Published : 02 Oct 2016 10:03 AM
Last Updated : 02 Oct 2016 10:03 AM

பச்சமுத்து மீது மேலும் ஒரு மோசடி வழக்கு

ஜாமீனில் விடுதலையான எஸ்.ஆர்.எம் குழும வேந்தர் பச்சமுத்து மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூளை ஹண்டர்ஸ் சாலையைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் முத்துக்குமார் என்பவர் வேப்பேரி காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவைக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2004-ம் ஆண்டு பச்சமுத்து எனது அலுவலகத்துக்கு வந்து, அவரது சொத்துப் பத்திரங்களை கொடுத்து ரூ.70 லட்சம் கடன் வாங்கினார். கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி மாம்பலத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். அலுவலகத்துக்கு சென்று நான் கொடுத்த பணத்தை கேட்டபோது, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். மதனுக்கு ஆன கதிதான் உனக்கும் ஆகும் என்றும் என்னை மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின்பேரில் வேப்பேரி போலீஸார் பச்சமுத்து மீது 2 பிரிவு களில் வழக்குப்பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x