அரசு விடுமுறை நாட்களில் பெட்ரோல் பங்க்குகளை மூட திட்டம்: பெட்ரோலிய வணிகர்கள் சங்க தலைவர் தகவல்

அரசு விடுமுறை நாட்களில் பெட்ரோல் பங்க்குகளை மூட திட்டம்: பெட்ரோலிய வணிகர்கள் சங்க தலைவர் தகவல்
Updated on
1 min read

பெட்ரோலிய பொருட்களுக்கு அறிவிக்கப்பட்ட விளிம்புத் தொகையை நிலுவையுடன் வழங்க வலியுறுத்தி அரசு விடு முறை நாட்களில் பங்க்குகளை மூட திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.பி.முரளி தெரிவித்தார்.

தமிழ்நாடு பெட்ரோலிய வணி கர்கள் சங்க சேலம் மண்டல வணிகர்கள் ஆலோசனைக் கூட் டம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமை யாளர்கள் பங்கேற்றனர். கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் குறித்து சங்க மாநிலத் தலை வர் கே.பி.முரளி கூறியதாவது:

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் கடந்த 2011-ம் ஆண்டு பெட்ரோலுக்கு லிட்ட ருக்கு ரூ.1.20, டீசலுக்கு ரூ.1.52 கூடுதலாக வழங்க வேண்டும் என்று பெட்ரோலிய நிறுவனங் களுக்கு உத்தரவிட்டது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக இந்த விளிம்புத்தொகை உயர்த்தப்பட வில்லை. கடந்த 3-ம் தேதி பெட் ரோலுக்கு லிட்டருக்கு 9 பைசா வும், டீசலுக்கு 8 பைசாவும் மட்டுமே உயர்த்தப்பட்டது.

பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்த விளிம்புத்தொகை உயர்த்தப்படாததால் நாடு முழு வதும் உள்ள சுமார் 53,000 பெட்ரோல் பங்க்குகள் நஷ்டத்தில் செயல்படுகின்றன. எனவே, விளிம்புத்தொகையை உயர்த்தக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். வரும் 26-ம் தேதி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் இரவு 7 மணிக்கு தொடங்கி அரை மணி நேரம் வரை விளக்கு களை அணைத்து, விற்பனையை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

நவம்பர் மாதம் 3, 4-ம் தேதி களில் எண்ணெய் கொள்முதலை நிறுத்த உள்ளோம். அடுத்தகட்ட மாக வரும் 5-ம் தேதி முதல் அனைத்து பெட்ரோல் பங்க்கு களிலும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விற்பனை நடைபெறும்.

இது தவிர அரசு விடுமுறை நாட்கள், 2-வது, 4-வது சனிக்கிழமைகள், ஞாயிற்றுக் கிழமைகளில் பங்க்குகளை மூடவும் திட்டமிட் டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in