எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு பாரம்பரிய நீராவி ரயில் இன்ஜின்: ஆக.15-ல் இயக்கம்

எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு பாரம்பரிய நீராவி ரயில் இன்ஜின்: ஆக.15-ல் இயக்கம்
Updated on
1 min read

சென்னை: உலகின் பழமையான ரயில் இன்ஜின் ‘இஐஆர்-21’. இங்கிலாந்தில் 1855-ல் தயாரிக்கப்பட்ட இது 167ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1909-ம்ஆண்டு வரை இந்தியாவில் இது ஓடியது.

பின்னர், ஜமால்பூர், ஹவுராரயில் நிலையங்களில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

உலகில் பயன்பாட்டில் இருக்கும்மிகப் பழமையான ரயில் இன்ஜினான இது, தற்போது சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மட்டும் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் 15-ம் தேதிசுதந்திர தின நாளில் இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை நினைவுகூரும்விதமாக, சென்னை எழும்பூரிலிருந்துகோடம்பாக்கம் வரை பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில் மீண்டும்இயக்கப்பட உள்ளது. இதற்காக,பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையில் இருந்து எழும்பூர் ரயில்வே யார்டுக்கு இந்த ரயில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரயிலை மக்கள் கண்டு ரசிக்கலாம்; பயணிக்க அனுமதி இல்லை. ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் பயணம் செய்வார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in