Published : 09 Aug 2022 12:37 PM
Last Updated : 09 Aug 2022 12:37 PM

அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியத்தை மொஹரம் வழங்கட்டும்: ஆளுநர் வாழ்த்து

ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியத்தை மொஹரம் வழங்கட்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

மொஹரம் பண்டிகையை ஒட்டி தமிழக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில், " இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதமான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பம் நம் அனைவருக்கும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் வலிமையை வழங்கட்டும்" இவ்வாறு அந்தச் செய்தியில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x