Published : 09 Aug 2022 12:24 PM
Last Updated : 09 Aug 2022 12:24 PM

தேசப் பிரிவினை துயரம் குறித்த கண்காட்சியின் நோக்கம் என்ன? - சு.வெங்கடேசன் கேள்வி

சென்னை: தேசப் பிரிவினை துயரம் குறித்த கண்காட்சியின் நோக்கம் என்னவென்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," தேசப் பிரிவினை துயரம் குறித்து கண்காட்சி நடத்துமாறு அரசு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர பவள விழா மதம் கடந்து மக்களை இணைக்கிற நிகழ்வு. குதிராம் போஸும், அசபுல்லா கானும் உயிரையே ஈந்த உணர்வை பகிர வேண்டிய நேரம்.

பிரிவினை துயரை காட்சி ஆக்குவதன் நோக்கம் என்ன?. மதவெறி அரசியலுக்காகவா?" இவ்வாறு அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x