

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரை ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வெள்ளிக்கிழமை முடித்துவைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தாண்டு மே 25-ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரை தமிழ்நாடு ஆளுநர், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174 (2) (a)-ன் கீழ் அக்டோபர் 14-ம் தேதிமுதல் இறுதி செய்துள்ளார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.