Published : 08 Aug 2022 12:48 PM
Last Updated : 08 Aug 2022 12:48 PM

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி நேரம் மாற்றம் 

சென்னை: தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி நேரத்தை சுகாதாரத் துறை மாற்றியமைத்துள்ளது.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்று இருந்தது.

இந்நிலையில், இந்தப் பணி நேரத்தை மாற்றியமைத்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x