புதுக்கோட்டை | கோயில் தேர் விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

ராஜகுமாரி
ராஜகுமாரி
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் கோயில் தேர் சாய்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி நேற்று உயிரிழந்தார்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா ஜூலை 31-ம் தேதி நடைபெற்றது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள செய்யப்பட்டு, தேரோட்டம் தொடங்கிய சில விநாடிகளிலேயே தேர் முன்புறமாக சாய்ந்தது.

இதில், அரிமளம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி ராஜகுமாரி(61) உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி நேற்று உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக கோயிலில் தேர் கட்டும் பணியில் ஈடுபடும் தற்காலிகப் பணியாளர்கள் 2 பேர் மீது திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் இயக்குநர் கண்ணன் தலைமையிலான குழு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in