Published : 05 Aug 2022 01:08 PM
Last Updated : 05 Aug 2022 01:08 PM

4,308 மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்யும் பணி செப்டம்பருக்குள் நிறைவு: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: “4308 மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்யும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பக்கத்திலுள்ள அரசு மனநல காப்பகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய காப்பீடு அட்டைகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கினார். மேலும் போதை மாத்திரை பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்டெடுக்கும் ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், "1794-ம் ஆண்டு முதல் மன நோயாளிகளுக்கு புகலிடமாக தொடங்கப்பட்ட கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் அமைப்பு 228 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தினசரி 350 புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுபோல் 43 இடங்களில் அரசு மனநல காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றனது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதார், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலேயே காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் இன்று 520 பேருக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 311 ஆண்கள், 209 பெண்கள் அடங்குவர் என்றார். அத்தோடு தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

சாதாரண மக்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்றால் அவர்களின் ஆண்டு வருமானம் 1.20 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வரம்பும் இல்லாமல் அவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள NIMHANS போல மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தை தரம் உயர்த்த 40 கோடி செலவில் கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒப்பியாயிட் மாற்று சிகிச்சை திட்டம் இன்று கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.400 பேர் பதிவு செய்துள்ளனர்.இந்த திட்டம் மூலம் போதை மாத்திரை பழகத்திற்கு ஆளானவர்கள் சிகிச்சை பெறுவார்கள்.

மருத்துவர்கள் உள்ளிட்ட 4308 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்தும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் மருத்துவ மையங்களை மூடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு செய்த மேல் முறையீடு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x